அல்வாயில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
முகமூடி அணிந்து வயோதிபர்களிடம் நகைகளும், பணமும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அல்வாய் வடக்கு அல்வாய் பகுதியில் உள்ள
கணேசமூர்த்தி விக்னேஸ்வரி என்பவரின் வீட்டிலேயே களவாடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இவரும் கணவரும் வசித்து வந்த நிலையில்
நேற்று முன்தினம் இரவு நாய்க்கு உணவு வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்த போது, மூன்று பேர் முகமூடி அணிந்து வந்து இவர்களிடமிருந்த 2 பவுண் சங்கிலி, ஒரு பவுண் தோடு, 36 ஆயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.