Mon. May 6th, 2024

அருணோதயக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், மலர் வெளியீடும்

அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும்,  அருணோதயம் மலர் வெளியீடும் நாளை சனிக்கிழமை முற்பகல் 8 மணிக்கு சிவஞானசோதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் ஞா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிகாம கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா இராஜசீலன், கெளரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவரும்,  ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளருமான ஐ.சிவயோகநாதன், அமரர் சிவஞான சோதி அவர்களின் பாரியார் திருமதி. குறமகள் சிவஞானசோதி ஆகியோரும்,  நினைவுப் பேருரையை வவுனியா பல்கலைக்கழக சுற்றுப்புற சூழல் அறிவியல் துறை, பிரத்தியேக விஞ்ஞான பீட பேராசிரியர் திருமதி. அனந்தினி நந்தகுமாரன் அவர்களும், மலர் ஆய்வுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரிக துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரமணராஜா அவர்களும், ஆசியுரையை அளவெட்டி கும்பழாவளை விநாயக ஆலய பிரதமகுரு பிரம்ம்ஸ்ரீ சோம . குமரதாசகுருக்கள் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்