Fri. Apr 26th, 2024

அசுர வேகத்தில் அராலி சரஸ்வதி – மெதடிஸ்த பெண்கள் கிண்ணமும் வசமாக்கியது

பரபரப்பான வலைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை தமது 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.
முதல் சில நிமிடங்களுக்கான ஆட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆட்டம் மேலோங்கி காணப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் தடுபாட்டத்தால் கோல்களைப் போடுவதில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியினர் பெரும் சிரமம்பட்டனர்.
இதனால் கோல்களின் எண்ணிக்கை சமநிலைப்படுத்தப்பட்டு இரு அணிகளும் மாறி மாறி கோல்களைப் போட ஆட்ட நேர முடிவில் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணி 15:14 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். மூன்றாமிடத்தை உடுவில் மகளிர் கல்லூரி அணி பெற்றது. அண்மையில் யாழ்ப்பாண கல்லூரியில்
நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட தொடரில் 15,17,19 போட்டிகளிலும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்