Sat. May 4th, 2024

அச்சுவேலி- சங்கானை வீதியை திறக்க முறச்சியுங்கள்

அச்சுவேலி சங்கானை வீதியில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் போர்வையில் பிரதான வீதியை பாதுகாப்பு படையினர் இடைமறித்துள்ளமையால் தற்போது க. பொ. த சா/தர பரீட்சை எழுதும் மாணவர்கள், பரீட்சை மேற்பார்வையாளர்கள், பெற்றோர்கள் என பலரும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
1கிலோ மீற்றர் செல்லவேண்டிய தூரத்தை 4 கிலோ மீற்றர் தூரம்  செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மீள்குடியமர்த்தப்பட்டமையால் தற்போது க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் வசாவிளான் மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி உட்பட பல பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட தூரம் சுற்றியே பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல மாணவர்களின் பிந்திய வருகைக்கு வீதி மூடப்பட்டுள்ளமையே காரணமாக அமைந்ததுள்ளது.
குறித்த வீதியைத் திறப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், வட்டார உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்