Thu. Apr 25th, 2024

கரவெட்டியில் மண்ணெண்ணெய் குண்டு 3 வயதுக் குழந்தை மயிரிழையில் உயிர் தப்பியது

கரவெட்டி இராஜ கிராம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளதுடன் 3 வயதுக் குழந்தை மயிரிழையில் உயிர் தப்பியுள்ளது சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில்  கரவெட்டி இராஜ கிராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராஜ கிராமம் வல்லி தர்சன் என்பவரின் வீட்டிற்கே மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,  குறித்த வீட்டில் 3 வயதுச் சிறுவன் படுத்துக்கொண்டு இருந்த போது யன்னல் வழியாக போத்தலில் மண்ணெண்ணெய் குண்டு தயாரித்து எறிந்துள்ளனர். அக்குண்டு வீட்டில் இருந்த மெத்தைக் கதிரையில் தீ பற்றியது. தீயை கண்ட சிறுவன் அலறி கொண்டு தீ என கத்தியபடி வெளியே ஓடி வந்துள்ளார். தாய் தந்தை வீட்டின் வெளியே நின்று கதைத்துக் கொண்டு இருந்துள்ளனர். சிறுவனின் அழுகையையடுத்து உள்ளே பார்த்த போது மெத்தைக் கதிரை மற்றும் லெவல் சீற் என்பன தீ பற்றி எரிந்து கொண்டிருந்தன.
அதன் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருப்பட்டது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்