இன்று மின் வெட்டு இல்லை

இன்று மின்சாரம் தடைப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வழமையாக 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மின்சாரம் தடைப்பட மாட்டது. இதேநேரம் உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரம் வழங்குவதற்கு பொறுப்பான நிறுவனங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றால், மீறிய குற்றத்திற்காக உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது ஆணையத்தின் அதிகாரத்திற்கு எதிரான அல்லது அவமதிப்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.