Sun. May 5th, 2024

வீதி விபத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்தது.

வீதியில் மாடு குறுக்கே போனதால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சற்று முன்னர் 8.35 மணியளவில் வடமராட்சி மாலைசந்தை  சதாபொன்ஸ் தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் கரணவாய் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாம்பழம் மகேந்திரன் (வயது 50) என்பவரே படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உடல் சுகயீனம் காரணமாக ஒருவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணித்துக் கொண்டிருந்த போது
மாடு குறுக்கே சென்றுள்ளது. இதனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வீதி வாய்க்காலுக்கு மேலாக பாய்ந்து தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்