Fri. Mar 29th, 2024

பருத்தித்துறை இளம் கபடி வீரர் உயிரிழப்பு

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இளைஞர் ஒருவர் தீடிரென விபரீத முடிவால்  உயிரிழந்தமை அப்பகுயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை  சேர்ந்த  ரெஜினோல்ட் றொன்சன் வயது 22 என்ற இளைஞர்  இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மன உளைச்சல் காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நித்திரைக்கு செல்ல முன்னர் நீரிழிவு மருந்தை அதிகளவு உட்கொண்டுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் 15 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் கபடி அணி தேசிய மட்டத்தில் பங்குபற்றிய போது விளையாடியுள்ளார். அமைதியானவர், எப்போதும் புன்னகையுடன், அனைவரையும் மதிக்கும் வீரராக இருந்துள்ளார். இளைஞரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்