வடமாகாண போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நாளை மறுதினம் 30ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 4ம்திகதி வரை தொடர்ந்து 5 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் கலந்து கொள்வதோடு, எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள இறுதிநாள் நிகழ்வு வடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனா கலந்து கொள்ளவுள்ளார்.