வடமராட்சி கல்வி வலய ஆசிரியர் இடமாற்றங்கள் முறையாக நடைபெற்றது. சு.யசீலன் தெரிவிப்பு
வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் முறையான வகையில் இம்முறை நடைபெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமராட்சி வலயச் செயலாளர் சு.யசீலன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சிச் வலயத்தின் உள்ளக இடமாற்றத்திற்கான இடமாற்ற சபை கடந்த 12-04-2022ம் திகதி வடமராட்சிச் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில் நடைபெற்றது. இம்முறை நடைபெற்ற இடமாற்றம் எந்த பக்க சார்பற்ற முறையில் நியாயமான முறையில் நடைபெற்றுள்ளது. இதுவரை காலமும் நடைபெறாத வகையில் தேசிய மற்றும் வடமாகாண இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக நியாயமான முறையில் நடைபெற்றது. அத்துடன் இந்த இடமாற்ற சபையில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் இணைந்து கொண்டு வலயக்கல்விப் பணிப்பாளரினால் முன் வைக்கப்பட்டது சரியான கொள்கையை ஏற்றுக் கொண்டு ஆதரவுகளையும் வழங்கியமை இங்கு குறிப்பிட்ட தக்க விடையமாகும். இவற்றுடன் பிரதிகல்விப் பதிப்பாளர்களான தெய்வேந்திரா, திருமதி நிர்மலன் ராதிகா ஆகியோருடன் மூன்று வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.