Mon. Apr 29th, 2024

சுகயீன லீவு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழையுங்கள். சூ.யசீலன் வேண்டுகோள்

நாளை நடைபெறவுள்ள ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமராட்சி கல்வி வலய செயலாளர் சு.யசீலன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் தடுப்பாட்டை கண்டித்து இந்த ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம் நடைபெறுகிறது. அரசு கண்துடைப்பிற்காக சம்பள ஏற்றத்தை மேற்கொண்டு, பொருட்களின் விலைகளை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வெளிமாவட்ட ஆசிரியர்கள் தமது சேவைகளை பூரணமாக செய்யமுடியாதுள்ளது.
எங்களுடைய பிரச்சனைகளை கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய போதிலும் சரியான தீர்வு கிடைக்காததையிட்டே இப்போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது இடம்பெறும் பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த கல்விச் சமூகமே பாதிப்படைகிறது. இதனால் நம் ஒற்றுமை பலத்தை அரசுக்கு வெளிப்படுத்தி நாட்டில் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைவரும் உரிய வகையில் சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்