போக்குவரத்து நாளை வழமைபோல் இடம்பெறும்
வடமாகாணத்திற்கான இலங்கை போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என வடமாகாண இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஊழியர்கள் கடமைக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்காக அதிகாலை 3 மணிக்கு ஊழியர்களை ஏற்றுவதற்கு பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்துமாறு அந்தந்த போக்குவரத்து சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை வழமைபோல் போக்குவரத்து இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.