நெல்லியடியில் திருட்டு ஆண், பெண் என இருவர் கைது
நெல்லியடி பகுதியில் இரு மாதங்களுக்கு முன்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி நகர் பகுதியில் பட்டப்பகலில் ஒருவரின் வீடு உடைத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக நெல்லியடி பொலீஸார் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு பொறுப்பான மூத்த பொலீஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த வீட்டில் அலைபேசி உட்பட பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலைபேசிக்கு ஒருவர் தனது சிம் காட்டை உட்புகுத்தி அலைபேசியை இயங்கச் செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான இவருடன் திருட்டுச் சம்பவதற்கு உடந்தையாக இருந்ததாக 20 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைப்பதற்காக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.