AIA இன்சூரன்ஸ் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்வு நிகழ்வு
AIA இன்சூரன்ஸ் அனுசரணையுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மக்களுக்கு தொற்றா நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் துவிச்சக்கர வண்டி பவனி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமாகி
நெல்லியடி சந்தி, வதிரிச் சந்தி ஊடாக மாலைசந்தி சென்றடைந்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வினை AIA நிறுவனத்தின் நெல்லியடி கிளை முகாமையாளர் சி.ரகுபரன் ஆரம்பித்து வைத்தார்.