Thu. May 2nd, 2024

ஸ்கூட்டியில் நூதனமான திருட்டு

வடமராட்சி அல்வாய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சையிக்கிளிலிருந்து தொலைபேசி மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த நபர் அல்வாய் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு முன்பாக ஸ்கூட்டி மோட்டார் சையிக்கிளை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.
இந்நிலையில் மோட்டார் சையிக்கிளில் வைக்கப்பட்டிருந்த ஐ போன், இந்திய ரூபா 5 ஆயிரம், யூரோ நாணயம் 250 ரூபா, இலங்கைப் பணம் 8 ஆயிரம் என்பன களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்