Thu. Apr 25th, 2024

தலை கவசம் அணியாததால் பறிபோகும் உயிர்கள்

மந்திகை பகுதியில் தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்து பயணித்தவர், தவறி வீழ்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

புலோலி தெற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராசு புவனேஸ்வரன் (வயது – 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து வேலைக்கு மோட்டார் சைக்கிளில் இன்னொருவருடன் பயணித்துள்ளார். இவர் தலைக்கவசம் அணியாது பின்னால் இருந்துள்ளார்.

மந்திகை பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்த நிலையில் பின்னால் இருந்தவர் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்துள்ளார்.

கடந்த வாரமும் மருதங்கேணி செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் தலைக்கவசம் அநியாததால் பாலியயாகியதும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்