Wed. May 1st, 2024

ஞானசம்பந்தர் கலை மன்ற முன்பள்ளி விளையாட்டு விழா

ஞானசம்பந்தர் கலை மன்ற  2022 ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி விளையாட்டு விழா நேற்றைய தினம் (06/08/2022) மன்ற விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஞானசம்பந்தர் மன்ற   தலைவர் பா.இரகுவரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மருதங்கேணி இந்துத் தமிழ் கணவன் பாடசாலை அதிபர் சி.இரங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சி.இரங்கநாதன் அவர்கள் குறிப்பிடுகையில்,
ஞானசம்பந்தர் கலை மன்றமானது 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பருத்தித்துறை பிரதேசத்தில் சிறப்பாக செயற்படுகின்ற முன்பள்ளி இதுவாகும். இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் இப்பிரதேசத்தில் இயங்கும் ஆரம்பபிரிவு பாடசாலைகளுக்கு சென்று சிறப்பாக கல்வி கற்று பின்னர் உயர்தரபாடசாலைகளுக்கு சென்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று சகல திணைக்களங்களிலும் பணியாற்றுகின்றனர்.
மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் மிக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஞானசம்பந்தர் கலைமன்ற நிர்வாகத்தினர், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகளிற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்