கடற்படையினருக்கு காணி சுவீகர்ப்பு மக்கள் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.
பச்சிலைப்பள்ளி கிளாலியில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கிளாலியில் இன்று காலை தனிநபர் ஒருவருக்கு சொந்தமான 05 பரப்பு காணியை கடற்படைக்கு அளவு செய்து கொடுக்க மேற்க்கொள்ளப்பட்ட முயற்சி மக்களின் எதிர்பை அடுத்து கைவிடப்பட்டது.
உபதவிசாளர் கஜன் உறுப்பினர் வீரவாகுதேவர் அமைப்பாளர் செல்வராஜேஸ்வரன் கட்சி கிளை தலைவர் கணு ஆகியோரும் சென்று மக்களை திரட்டி எதிர்பு தெரிவித்ததை அடுத்து நில அளவைத்திணைக்களம் இடத்திலிருந்து அகன்று சென்றனர்.