கரவெட்டி கோட்ட அதிபர் சங்கமும் போராட்டத்திற்கு ஆதரவு
கரவெட்டி கோட்ட அதிபர் சங்கமும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
இன்று கரவெட்டி கோட்ட அதிபர்களுக்கான கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
21ம் திகதிக்கு முன்னர் அதிபர் ஆசிரியர் சங்க தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால் பாடசாலை கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், நாளைய தினம் உத்தியோக பூர்வமான கடிதத்தை வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளருக்கும் கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.