Mon. Apr 29th, 2024

183 பேரை வேலையில் இருந்து நீக்கிய ஷெரட்டன் ஹோட்டல், ஜனாதிபதியை தலையிட கோரிக்கை

கொழும்பு ஷெரட்டன் ஹோட்டலில் வேலை செய்த 183 வேலையாட்களை அந்த ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக வேலையில் இருந்து நீக்கியுள்ளது . ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாக தொழிலாளர்கள் தெறிவித்துள்ளார்கள். இதன் மூலம் தங்களுக்கு எந்த வித நட்ட ஈடும் வழங்காமல் தங்களை ஹோட்டல் நிர்வாகம் நீக்கி தங்களுக்கு அநீதி இளைத்துள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி தலையிடவேண்டும் என்று கோரி ஜனாதிபதிக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்கள்.
கோரோனோ வைரஸ் தாக்கத்தால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்த நிலையில் உலகில் உள்ள ஹோட்டல்கள் யாவும் வருமானம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஷெரட்டன் ஹோட்டல் ஆனது இந்திய தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாக தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்