யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(25) மின்சாரம் தடைப்படும்
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(25) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை- 8.00 மணி முதல் மாலை-5.00 மணி வரை யாழ்.நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன் தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, லிங்ரெடி மிக்ஸ் பிறைவேற்
லிமிற்ரெட் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.