15 வயது சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய முஸ்லீம் இளைஞர்!!
யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய 19 வயது இளைஞனையும், அதற்கு உதவிய பெண்ணையும் எதிர்வரும் 31 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வலிகாமத்தை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவிக்கும், 19 வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற குறித்த இளைஞர் மற்றுமொரு பெண்ணின் உதவியுடன் அவரின் வீட்டில் வைத்தே குடும்பம் நடத்தியுள்ளர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மாணவியையும் இளைஞனையும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இளைஞனும் அவருக்கு தங்குமிடம் வழங்கி உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
அத்துடன், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இளைஞனையும் பெண்ணையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், பெண்ணின் கைக்குழந்தையை சிறைச்சாலையில் தாயார் வைத்திருக்கவும் அனுமதியளித்துள்ளது.