Wed. May 15th, 2024

அரசியல்வாதிகளின் மடியில் கைவைக்கும் சஜித்!! -சுகபோக கொடுப்பனவுகள் இனி இல்லையாம்-

அமைச்சர்களதும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சுகபோக வரப்பிரசாதங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இவர்களுக்கான வரப்பிரசாதங்களை நிறுத்தினால் நான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நிதி கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை யடிநுவர கடுகன்னாவ சுனில் எஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரம் தரமுயர்த்தப்படும். நவம்பர் 17 ஆம் திகதி அதி கூடிய வாக்குகளால் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்ததன் பின்னர் வறுமையிலிருக்கும் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூர்த்தி வேலை திட்டம் மேம்படுத்தப்படும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்