ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்ட குழு இசையில் முதலிடம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத இசைப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டிகள் நேற்று அநுராதபுரம் ஸ்வர்ணபாலி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இதில் சிரேஷ்ட உயர்நிலை பிரிவினருக்கான குழு இசை ஆண்களுக்கான போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.