Sat. Apr 27th, 2024

வெள்ள நிவாரணத்துக்கு என்று பணம் பெற்று ஏமாற்றும் குழு

கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில்  உள்ள கிராமங்களுக்குச் சென்று பல்சர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த இருவர் வெள்ள நிவாரண நிதிக்காக உங்களால் இயன்ற பண உதவி செய்யுமாறு பணம் பெற்று வருவதாக பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கு தெரியவந்துள்ளது.  கிராம சேவையாளர்கள் உடனடியாக பிரதேச செயலருக்கும்  பிரதேச  செயலக கிராம சேவை அதிகாரிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.  வெள்ள நிவாரணத்திற்கு என பணம் சேகரிப்பவர்களை உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் நெல்லியடி பொலிசாறிடம் பிடித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். மோசடிக்காரர்கள் பண உதவி கேட்டு வரும்பொழுது உடனடியாக கிராமசேவையாளர்க்கு அல்லது பொலீசாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களை  பிரதேச செயலர் கேட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்