பருத்தித்துறை வாசிக்கு கொரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை வாசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொண்டை நோ என வந்தவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 25 வயதுடை ஆண் ஒருவருகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் மருதனார்மடம் சேவிஸ் ஸ்ரேசனுக்கு சென்று கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்ததாகவும், அதன் பின்னர் 3 நாட்களாக வீடு மற்றும் பல பகுதிகளில் நடமாடியுள்ளார். இந்நிலையில் சளி மற்றும் தொடர்ச்சியான காச்சல், தொண்டை நோ எனக் குறிப்பிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 2 ம் திகதி சிகிச்சை பெற்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரி அனுப்பப்பட்டது. முதலில் தீர்மானிக்க முடியவில்லை என முடிவு கிடைத்ததன் பேரின் நேற்று இவருக்கான இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் நேற்று காலை வயிற்றுக்குத்து என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது குறித்த நபரின் குறிித்த நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அவர் சென்ற இடங்கள் தொடர்பாக தகவல் மேற்கொள்ளப்படுகிறது.