Mon. May 6th, 2024

வெள்ளவத்தையில் வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் குத்தி கொலை

வெள்ளவத்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (17) கூறிய ஆயுதத்தால் நபர் ஒருவர் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார் .இது தொடர்பான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட சூடான வாக்குவாதம் எல்லைமீறியதால் கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் மீது மற்றையவர் குத்தியதால் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
ஆபத்தான நிலையில் இருந்த காயமடைந்த நபர் கலுபோவில்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .

அவர் வெள்ளவத்தை ஸ்வர்ணா வீதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார்.

மாஜிஸ்திரேட் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை இன்று (18) நடத்தப்படும் என்று தெரியவருகிறது .

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்