Tue. May 7th, 2024

கோரோனோ நோயாளிகளை ஏற்றி சென்ற பஸ்சில் இருந்து வீதியால் சென்றவர் மீதி வெற்றிலை எச்சில் துப்பல்

கோவிட் -19 தொற்றுக்குள்ளான நபர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தில் பயணித்த ஒருவர், வாகன ஓட்டியின் மீது வெற்றிலை எச்சிலை துப்பிய சம்பவம் பலாங்கொடை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பஸ்சினுள் ஏறி துப்பியவரை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். இதன்பொழுதே கோரோனோ தொற்றாளர்களை ஏற்றிச்செல்லும் பஸ் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது .

பயணிகள் பலாங்கொடைவின் வட்டவாலவில் உள்ள கோவிட் -19 சிகிச்சை மையத்திற்கு செல்லும் வழியில் இருந்தனர் என்று தெரியவருகிறது .

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பி.எச்.ஐ., வாகன ஓட்டியை சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தியதனால் , அவர் தனது குடும்பத்தினருடன் தனிமைபடுத்தப்படுள்ளார் . இந்த சம்பவத்தை தொடர்ந்து வாகனம் ஓட்டியவர் தனது உடமைகளை பஸ்ஸில் விட்டுச் சென்றிருந்த நிலையில் அவைகள் தொற்றுநீக்கத்தின் பின்னர் அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்