Thu. May 2nd, 2024

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் யாழ்.இளைஞர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் பாயும் புலி சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியினை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் நேற்று கடைமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, சீருடை ஒன்றும் (ரீசேட்) மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சந்தேகநபர்

வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்