Thu. May 2nd, 2024

தூக்கத்தில் வாகனம் செலுத்திய சாரதி!! -ஒருவர் பரிதாப சாவு-

மாரவில கட்டுனேரிய பிரதேசத்தில் பாரவூர்தியும் மகிழூர்தியும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்த மகிழூர்தியின் சாரதி, 42 வயதுடைய கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்தவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பாரவூர்தியானது அனுராதபுரம்-சாலியவெவ பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி செங்கற்களை ஏற்றிச்சென்றுள்ள வேளையில், பாரவூர்தியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்