Sun. Apr 28th, 2024

விகாரைகளின் உண்டியல் உடைப்பு!! -இளைஞரை கைது செய்த பொலிஸ்-

நாட்டில் உள்ள வெவ்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரொருவரை பாதுக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் போபே ஸ்ரீ சுதர்மாராம விகாரைக்கு சென்ற குறித்த இளைஞர், அன்றைய இரவு மாத்திரம் விகாரையில் தங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளார்.

இதன்படி, குறித்த இளைஞருக்கு தங்குவதற்கான அனுமதியை விகாராதிபதி கொடுத்துள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட குறித்த நபர் அங்கிருந்து உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தினை கொள்ளையடித்துச் சென்றிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்