வவுனியா கனகராயன்குளம் பகுதியில் A-9 வீதிக்கு குறுக்காக தடம்புரண்ட கனகரக வாகனம்
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் A-9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08) விபத்து ஏற்பட் டதன் காரணமாக வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறு காயத்துடன் உயிர் தப்பியுள் ளார்.
இவ்விபத்து காரணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறி காணப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் .