Tue. Apr 30th, 2024

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு , 5 பேர் காயம் , இருவர் கைது

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்