Tue. Apr 30th, 2024

யாழில் வாள்வெட்டு குழு தலைவனுக்கு பிறந்தநாள் கொண்டாடமுற்பட்ட இளைஞர்களை அதிரடியாக மடக்கிப் பிடிப்பு

யாழில் வாள்வெட்டு குழுவின் தலைவனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்கு ஒன்று கூடிய 26 இளைஞர்களை இன்றைய தினம் மருதனார்மடத்தில் வைத்து யாழ்ப்பாணப் பொலிசார் கைது செய்துள்ளனர்  இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வாள் வெட்டு குழுவினர் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கேக்வெட்டுவதற்கு இளைஞர்கள் ஒன்று கூடியதாக யாழ்போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மருதனாமடம் பகுதியில் வைத்து26. இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 08 மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டனர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்