10 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் வவுனியாவில் கைது
வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் கைது வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பிரதேசத்தில் 42 வயதான நபர் 10 வயதான பாடசாலை மாணவியை மீட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளர்சந்தேக நபர் குறித்த சிறுமியை வீரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் வீராபுரம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை பொலிசார் கைது செய்ய முயன்றபோது அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.