Sun. May 5th, 2024

வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி அபிராமி பார்த்தீபன் இன்று பதவி ஏற்பு

வலயக் கல்விப் பணிப்பாளராக
திருமதி அபிராமி பார்த்தீபன் இன்று  வெள்ளிக்கிழமை முதல் தனது
கடமையை பொறுப்பேற்றுள்ளார். பதில் வலயக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய கிருபாகரன் அவர்களால் இன்று  பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய வலயக் கல்வி பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வு இன்று  பருத்தித்துறை கோட்டக்கல்வி அதிகாரி மா நவநீதமணி தலைமையில் நடைபெற்றது. இதில்
தென்மராட்ச்சி வலய கல்விப்பணிப்பாளர்
கிருபாகரன், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் இரவீந்திரன், ஓய்வு பெற்ற மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராசா, ஓய்வு பெற்ற அதிபர்
இராகவன் ஆகியோர்
வாழ்த்துரை நிகழ்த்தினர். இதில்
கோட்டகல்வி அதிகாரிகளான யோகநாதன், இராமச்சந்திரன் மற்றும்  வலய அலுவலர்கள்
அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்