வடமராட்சியில் பாடசாலை விட்டு விலகிய மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்த அதிகாரிகள்
யா/கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசிலையில் கல்வி கற்று அதிகளவு நாட்கள் பாடசாலை செல்லாது இடைவிலகிய ஐந்து கிராமத்தை சேர்ந்த மாணவர்களை சமரபாகு, கரணவாய் வடக்கு, கரணவாய் வட மேற்கு,பொலிகண்டி தெற்கு,பொலிகண்டி கிழக்கு, கிராம அலுவலர்கள், சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள், கல்வித்திணைக்கள அலுவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீடு வீடாக சென்று மொத்தமாக 36 மாணவர்களை அழைத்துக்கொண்டு பாடசாலையில் சேர்ப்பித்தனர்.