வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 5ம் திகதி முற்பகல் 9.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 வரை யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.