வங்கிகள் 4 மணி நேரம் மட்டுப்படுத்திய சேவை
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நீண்ட நேரம் வங்கிகளை திறந்து வைத்திருப்பதனால் ஊழியர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் இலங்கை மத்திய வங்கி, வங்கி நிர்வாகங்கள் மற்றும் இலங்கை வங்கியாளர்கள் சங்கம் என்பவற்றிற்கு வங்கி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்திற்குட்பட்ட அனைத்து வங்கிகளும் 4 மணித்தியாலங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுவதுடன் வார இறுநாள் சேவைகளும் நடைபெறமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.