Tue. May 7th, 2024

வங்கிகள், பாற்சாலை, நகைக் கடை என பலருக்கு வடமராட்சியில் தொற்று

வடமராட்சி பகுதியில் நெல்லியடி இலங்கை வங்கி,  பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி, நெல்லியடி நாவலர் மடம் பால் உற்பத்தி நிலையம், நெல்லியடி யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள நகைக் கடை என பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி இலங்கை வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதன் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதோடு அவருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு நாளைய தினம் வேறு ஊழியர்களுடன் இலங்கை வங்கி இயங்கவுள்ளது. அதேபோல் பருத்தித்துறை தேசிய சேமிப்பு வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று அதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லியடி பகுதியில் இயங்கும் பாற்சாலையிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் நெல்லியடி யாழ்ப்பாணம் வீதியில் இயங்கும் நகைக் கடையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்