Fri. May 3rd, 2024

லயன்ஷிகாவின் ஹெற்றிக் கோல் மகாஜன கல்லூரி சம்பியன்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று வியாழக்கிழமை நகுலேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணியை எதிர்த்து அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி வீராங்கனை லயன்ஷிகா 3 கோல்களை பதிவு செய்தார். இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் போராடிய போதிலும் மேலதிக கோல்களைப் பதிவு செய்ய முடியவில்லை.  இதனால் ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை நகுலோஸ்வரா வித்தியாலய அணி பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்