Tue. Apr 30th, 2024

ரயில் சேவைகள் திங்கள் வரை நிறுத்தம்

மாலை இன்று (20) 3.30 மணி முதல் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. திங்கள் (23) காலை 6.00 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும்.

அதன்படி மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில், கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மஹாவா வரை செல்லும் இது இன்றைய இறுதி ரயில் பயணமாக இருக்கும்.

மாலை 6.00 மணி முதல் தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாலை 4.00 மணி முதல் எந்தவொரு அதிவேக நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று சாலை மேம்பாட்டு ஆணையத்தின் (ஆர்.டி.ஏ) தலைவர் சமிந்தா அதுலுவகே தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்