Sat. Apr 20th, 2024

நெல்லியடியில் களவு போன சைக்கிள், 4 மணித்தியாலத்தில் கண்டு பிடித்த பொலிஸ்

20.03.2020 இன்று காலை மத்தணி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நெல்லியடி கூல் பாருக்கு முன் சைக்கிளை நிறுத்திவிட்டு கூல் பானம் குடித்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது பூட்டிவிட்டு சென்ற சைக்கிளை காணவில்லை. உடனடியாக நெல்லியடி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்தார். நெல்லியடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் சைக்கிளும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடை பதிவு செய்து 4 மணித்தியாலத்தில் பொலிஸார் சைக்கிளை கண்டுபிடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்