Sat. Apr 27th, 2024

யா/கரணவாய் மணியகாரன் தோட்டம் அ.த.க.பாடசாலைக்கு அன்பளிப்பு

யா/கரணவாய் மணியகாரன் தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசில் தின நிகழ்விற்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவன் சிவலிங்கம் சிறிபாஸ்கரன் அவர்கள் அன்பளிப்பாக 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபா நிதியை தனது சகோதரன் ஊடாக பாாடசாலை முதல்வர் நல்லதம்பி நந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 19ம் திகதி பாடசாலை முதல்வர் நந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவரும் சுவிஸ்நாட்டில் வசிக்கும் சமூக சேவையாளருமான சதாசிவம் கருணாகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் சிவலிங்கம் தர்மகுலசிங்கம், யசோ எஞ்சினியரிங் எஞ்சினியர் கிருஸ்ணபிள்ளை யசோதரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். தற்போது வெளியான தரம் புலமைப் பரீட்சை பெறுபேற்றில் 30 பேர் பரீட்சைக்கு தோற்றி அனைவரும் சித்தியடைந்துள்ளதுடன் 10 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்