Thu. Mar 28th, 2024

இளைஞன் விபத்தில் பலி – அப்பகுதியே பெரும் சோகத்தில்

விபத்தில் காயமடைந்த அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அச்சுவேலி கதிரிப்பாய் வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த விஜயரட்ணமூர்த்தி துவிசன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ம் திகதி சாவகச்சேரி பகுதியிலிருந்து தச்சுவேலை முடித்து புத்தூர் நீர்த்தாங்கி அருகிலுள்ள வீதியில் பயணம் செய்த போது வீதியில் கோழிக்கூட்டை சிலர் தூக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சையிக்கிளில் பயணித்த  இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கோழிக்கூட்டில் மோதுண்டு இன்னுமொரு மோட்டார் சையிக்கிளுடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளார். அப்போது தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்