நேசக்கரம் ஊடாக படுக்கை வசதி வழங்கி வைப்பு
படுக்கை வசதியின்றி பெரும் துயரங்களை எதிர் கொண்டு வந்த பெண்ணுக்கு மைக்கல் நேசக்கரம் ஊடாக படுக்கை வசதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் மற்றும் உடுப்பிட்டி ஆசிரியர் சின்னத்தம்பி குடும்பம் ஆகியோர் வழங்கிய ரூபா 45000 நிதியில் இன்றைய தினம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
கெருடாவில் பகுதியில் நீண்டகாலமாக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு படுக்கை வசதியின்றி கஸ்டங்களை எதிர் கொண்டு வந்த பெண் ஒருவருக்கே படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.