Fri. May 3rd, 2024

யாழ் மாவட்டத்தில் 20 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று வடமாகாணத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 20 பேருக்கும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொது வைத்தியசாலைக்கு சென்ற வெளி நோயாளர்களுக்கும், யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் 6 பேருக்கும்,  யாழ் சிறைச்சாலையில் 5 பேருக்கும்,  தெல்லிப்பளை வைத்தியசாலையில் விடுதியில் ஒருவருக்கும்,  சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட 4 பேருக்கும்,  சங்கானை சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட இருவருக்கும்,  வீதி அபிவிருத்தி வேலையில் ஈடுபடும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்