யாழ் மாவட்டத்தில் 20 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று வடமாகாணத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 20 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொது வைத்தியசாலைக்கு சென்ற வெளி நோயாளர்களுக்கும், யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் 6 பேருக்கும், யாழ் சிறைச்சாலையில் 5 பேருக்கும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் விடுதியில் ஒருவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட 4 பேருக்கும், சங்கானை சுகாதார பிரிவில் நேரடித் தொடர்பு கொண்ட இருவருக்கும், வீதி அபிவிருத்தி வேலையில் ஈடுபடும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.