Mon. May 6th, 2024

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இதில் ஏழாலை பகுதியைச் சேர்ந்த மூவருக்கும்,  இணுவில் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும்,  வவுனியா மாவட்டத்தில் திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும், மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்