Tue. May 7th, 2024

யாழ் நகரில் சைக்கிள் களவில் ஈடுபட்ட இருவர் கைது , 9 சைக்கிள்கள் மீட்பு

யாழ் நகரில் இரண்டு சைக்கிள்களுடன் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகம் கொண்ட யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த சிவில் பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்போது சந்தேக நபர், கொட்டடிப் பகுதியில் உள்ள இடமொன்றை அடையாளம் காட்டியுள்ளார். அங்கு மேலும் 9 துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அத்துடன் சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் இருவரும் அரியாலை, சுண்டுக்குளி, குருநகர் உள்பட யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் துவிச்சக்கர வண்டிகளை அடையாள படுத்தும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார்
தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்