சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது
மானிப்பாய் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 65 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற உத்தியோகத்தர் இருவர் பணம் கொடுத்து மதுபானத்தை வாங்கிய பின்னர் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுத்தனர்.அரச விடுமுறை நாளில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 65 வயதுடைய பெண் ஒருவரும் 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.